நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள், நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
எரேமியா 29:12
Name | Total Hours |
Santhi Priscillal | 7:49:00 |
S.Jothi Stephen | 4:27:57 |
Selvakumari | 4:02:33 |
Anjlin Joice | 3:11:27 |
Suganthi Shankar | 2:38:30 |
Jothilakshmi | 1:52:05 |
Raeshma | 1:31:20 |
Jenifer | 0:34:25 |
samuel | 0:29:28 |
marthal | 0:19:03 |
Evangeline delphin | 0:17:15 |
Elizabeth | 0:10:41 |
S. Sulochana Ruth | 0:08:07 |
Esther | 0:04:39 |
இந்தியாவிற்காக ஜெபிப்போம்…!
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும்,
பூயியின் எல்லைகளை உமக்குச் சொந்தாமகவும் கொடுப்பேன் (சங் 2:8)
சுமார் 140கோடி மக்கள் நிறைந்த நம் தேசத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்!
* இந்தியாவிலுள்ள சுமார் 7லட்சம் கிராமங்களுக்காக…!
* • சுமார் 71கோடி ஆண்கள்/சுமார் 66கோடி பெண்களின் இரட்சிப்பிற்காக…!
* தேசத்தின் எல்லைகளில் தேவ பாதுகாப்பு உண்டாக, அமைதி நிலவ…!
தேசத்தில் நீதி, நியாயங்கள் காக்கப்பட, அநீதி இழைப்போர் மனந்திரும்ப…!
அனைத்து துறைகளும் சிறந்த முறையில் செயலாற்றப்பட, துறை அதிகாரிகளுக்காக…!
* அண்டை நாடுகளிடையே வேற்றுமை நீங்கி ஒற்றுமை, சமாதானம் நிலவ…!
* அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், தொண்டர்களுக்காக…!
* மத்திய/மாநில அரசு அலுவலகங்கள் சிறந்த முறையில் செயல்ப…!
அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகாக்கள்மீது தேவ ஆளுகை உண்டாக…!
* ஜனங்களைக் குருடாக்கி வைத்திருக்கிற அறியாமை இருள் அகன்று போக…!
பாகாலின் பலிபீடங்கள், பிசாசின் சிங்காசனங்கள் தகர்க்கப்பட..!
* குறிகேட்டல், ஜோசியம், நாள், நேரம் வாஸ்து பார்த்தல் இவைகளிலிருந்து விடுபட…!
* சூனியக்காரர், மந்திரவாதிகள், பூசாரிகள், சாமியார்கள் முற்றிலும் மனம்திரும்ப…!
* ஜனங்களை வஞ்சித்து மோசம் போக்குகிற சத்துருவின் தந்திரங்கள் முற்றும் நிர்மூலமாக…!
* பெருமை, பொறாமை, பழிவாங்குதல் எனும் பொல்லாத குணங்களிலிருந்து ஜனங்கள் விடுபட…!
* மதிமயங்கப்பண்ணும் மனித தத்துவங்களிலிருந்து ஜனங்கள் விடுதலையாக…!
குடி, புகை, போதைப் பழக்கத்திற்கு அடிமையானோர் முற்றிலும் விடுதலைபெற…!
* உலகமும் அதின் ஆசை இச்சைகளும் அழிந்துபோகும் என்பதை ஜனங்கள் உணர்ந்துகொள்ள…!
* ஜாதி, இனம், மதம், மொழி வைராக்கியத்திலிருந்து ஜனங்கள் மனந்திரும்ப…!
*இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்றும் மெய்யான தேவன் என்றும் அறிந்து ஏற்றுக்கொள்ள…!
* இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலுண்டாகும் பாவமன்னிப்பை ஜனங்கள் பெற்றுக்கொள்ள…!
* சத்தியத்தை அறிந்து விசுவாசித்து இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்படுவோர் அதிகரிக்க…!
நித்திய ஜீவனைக் குறித்த அறிவும், நம்பிக்கையும், வருகைக்கான ஆயத்தமும் உண்டாக…!
தேசத்தின் ஆசீர்வாதம், முன்னேற்றம், சமாதானத்தை சீர்குலைக்கிற கிரியைகள் கட்டப்பட..
இந்தியாவில் தினமும்… சுமார் 75,658பேர் பிறக்கிறார்கள்; சுமார் 27,468பேர் இறக்கிறார்கள்
*சட்டவிரோதமாக நம் மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு போலி நிறுவனங்கள் அரசாங்கத்தின் மூலமாக முற்றிலுமாய் இனங்கண்டு கொள்ளப்பட்டு அவைகள் முடக்கப்பட ஜெபியுங்கள்.
*கருப்பு பணத்தை மறைத்து வைக்கவும் மற்றும் அந்த கருப்பு பணத்தை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட பினாமி மூலமாக செயல்படுகின்ற எந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் அது முற்றிலுமாய் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட ஜெபியுங்கள்.
இப்படிப்பட்ட போலி நிறுவனங்கள் மூலமாக அநேக பண மோசடிகள் நம் மாநிலத்தில் காணப்படுகின்றது, இந்தக் காரியங்கள் காரியங்கள் முற்றிலுமாய் நம் மாநிலத்தை விட்டு நீங்கி போக ஜெபியுங்கள்.
*போலி நிறுவனங்கள் மூலமாக நம் மாநிலத்தில் நடக்கிற நாம் அறியாததும் மற்றும் மறைக்கப்பட்டும் இருக்கிற காரியங்களை கர்த்தரே வெளிகொண்டு வரும்படிக்காக ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள்.
For Nation:
1• இந்தியாவின் இரட்சிப்புக்காக
2• தேச தலைவர்களுக்காக
3• தேச எல்லையின் பாதுகாப்புக்காக
4• வன்முறை இல்லாத தேசமாக
5• தேசத்தின் செழிப்புக்காக
6• விவசாயம் செழிக்க
7• தேசத்தில் நீதி நிலைநாட்டப்பட
8• லஞ்சம் இல்லாத தேசமாக மாற
9• சுற்றுச்சூழல் மாசு இல்லாத தேசமாக மாற
10• தேசத்தில் உள்ள ராணுவப் படைகளுக்காக
For Tamilnadu:
1• தமிழ்நாடு அரசியலுக்காக
2• பாலியல் வன்கொடுமை முற்றிலுமாக அகற்றப்பட ஜெபியுங்கள்
3• போதைப் பழக்கங்கள் முற்றிலுமாக நீக்கப்பட ஜெபியுங்கள்
4• டாஸ்மாக் கடைகள் மூடப்பட ஜெபியுங்கள்
5• சிறு பிள்ளைகள் தேவனை அறிய ஜெபியுங்கள்
6• வாலிபர் மத்தியில் எழுப்புதல் உண்டாக ஜெபியுங்கள்
7• திக்கற்ற பிள்ளைகள் தேவனை அறிய ஜெபியுங்கள்
8• கலாச்சார சீர்கேடுகள் அழிக்கப்பட ஜெபியுங்கள்
9• ஓரினை சேர்க்கை பாவங்கள் நீக்கப்பட ஜெபியுங்கள்
10• ரவுடிகள் உடைய அராஜகம் ஒழிய ஜெபியுங்கள்